சென்னை

பிப்.17-இல் வேலைவாய்ப்பு முகாம்

DIN

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 17 - ஆம் தேதி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), கிண்டி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ( தொழில்நுட்பம்) சார்பில், வரும் பிப்.17-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில், காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8, 10, 12 -ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் தங்களது கல்விச் சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப் படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களின் விவரங்களை www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பிப். 17 அன்று நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு இப்பணியமர்த்தல் சேவை முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT