அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நாளை மயான கொள்ளை
சென்னையை அடுத்துள்ள பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் புதன்கிழமை (பிப்.14) காலை மயான கொள்ளை ஆகிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் புதன்கிழமை (பிப்.14) காலை மயான கொள்ளை ஆகிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும்.
இதையொட்டி கடந்த பிப்.3-ஆம் தேதி முதல் தொடர்ந்து 11 நாள்களாக கலச பூஜை, அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா பி.கே.மகேந்திரன், பி.என்.பாண்டுரங்கன், பி.ஆர்.லட்சுமிபதி, புருஷோத் மோகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.