சென்னை

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

DIN

காவலர் பணியிட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 31 -ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) போன்ற பணியிடங்களுக்கு மார்ச் , ஏப்ரல் 2018-இல் தேர்வு நடைபெறவுள்ளது. இப்போட்டித் தேர்வில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கான முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் மாவட்ட வேலைவாய்ப்பு ( பொது) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்து, இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, உரிய கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 3 1-ஆம் தேதிக்குள் சந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (பொது), அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT