சென்னை

18 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

DIN

சென்னை பெருநகர காவல் துறையில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
அதன் விவரம்: 
சென்னை பெருநகர காவல் துறையின் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, சென்னை முழுவதும் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதில் முக்கியமாக, ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் பி.விஜயரங்கன், சேலையூர் குற்றப்பிரிவுக்கும், எம்.ஜி.ஆர்.நகர் காவல் ஆய்வாளர் கே.தேவராஜு ராயப்பேட்டைக்கும், துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் வி.சீனிவாசன் மத்தியக் குற்றப் பிரிவுக்கும், சி.எம்.பி.டி. காவல் ஆய்வாளர் பிராங் டி.ரூபன், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 18 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஓரிரு நாள்களில் புதிய இடங்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT