சென்னை

சார்பு ஆய்வாளர் பணியிட தேர்வு முடிவு வெளியீடு

DIN


தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 
இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக காவல்துறையில் உள்ள 309 சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, 6 மையங்களில் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வின் முடிவு  www.tnusrbonline.org  என்ற இணையத்தளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் தகுதி மதிப்பெண்கள், அடுத்தக்கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்கு தகுதி பெற்றவர்களின் சேர்க்கை எண்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. உடற்கூறு அளத்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடைபெறும் நாள்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT