சென்னை

திடீர் மாரடைப்பால் விமான பயணி உயிரிழப்பு

DIN


அந்தமானில் இருந்து மும்பை சென்ற பயணிகள் விமானம் சென்னை வான்வெளியைக் கடந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பயணி உயிரிழந்தார்.
அந்தமானில் இருந்து மும்பைக்கு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு தனியார் விமானமொன்று புறப்பட்டுச் சென்றது. 150 பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தில் மும்பையைச் சேர்ந்த விஜய் குல்கர்னி (72), அவரது மனைவி ஆல்பா (62) ஆகியோர் பயணம் செய்தனர்.
விமானம் காலை 9.30 மணிக்கு சென்னை வான்வெளியைக் கடந்தபோது விஜய் குல்கர்னிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விஜய் குல்கர்னியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். 
விஜய் குல்கர்னி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவியுடன் அந்தமானுக்கு சுற்றுலாச் சென்று விட்டு மும்பை திரும்பும்போது இந்த இச்சம்பவம் நடந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT