முகப்பு
சென்னை

காவலரிடம் வழிப்பறி

சென்னை மந்தைவெளியில் காவலரிடம் செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 4:41 AM
பகிர்:


சென்னை மந்தைவெளியில் காவலரிடம் செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தைவெளி சாலையார் தெருவைச் சேர்ந்தவர் சி.மணிமாறன் (25). இவர் சென்னை பெருநகர காவல் துறையில் ஆயுதப்படைக் காவலராக பணிபுரிகிறார். மணிமாறன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு புறப்பட்டு, மந்தைவெளி பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், மணிமாறன் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.