6-இல் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலகம் திறப்பு: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
சென்னை கலைவாணர் அரங்கில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலக திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலக திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இவ்விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை அண்ணா நகர் ஜ்-4, 5-ஆவது பிரதான சாலையில் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை மாலை ல் நடைபெற உள்ளது.
இதில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி விருதும் வழங்க உள்ளார். இதில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.