ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.
சனிக்கிழமையுடன் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்த ரபி சங்கருக்குப் பதிலாக ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஜெயினின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர், மே 3 அல்லது அதன் பிறகு முறைப்படி பொறுப்பேற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். ரோகித் ஜெயின் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். 1934-ஆம் ஆண்டின் ஆர்பிஐ சட்டத்தின்படி, மத்திய வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும்.
Advertisement
தற்போது ஆர்பிஐ-யின் மற்ற மூன்று துணை ஆளுநர்களாக சுவாமிநாதன் ஜே, பூனம் குப்தா மற்றும் எஸ். சி. முர்மு ஆகியோர் உள்ளனர். இன்றுடன் பதவிக்காலம் முடிந்த ரபி சங்கர் முதலில் 2021 செப்டம்பரில் மூன்று ஆண்டுகளுக்கு ஆர்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிறகு அவருக்கு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் தலா ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.