சென்னை

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

தினமணி

சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் பெண்ணிடம் தங்கநகை திருடப்பட்டது.
 மாதவரம் பொன்னியம்மன்மேடு வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி கல்பனா (26). ஆந்திர மாநிலம் சித்தூர் செல்வதற்காக, வெள்ளிக்கிழமை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வந்தார். அரசு பேருந்தில் சிறிது தூரம் சென்றபின் உடைமைகளைச் சரி பார்த்தபோது 11 பவுன் தங்க நகை வைத்திருந்த பை திருடப்பட்டது தெரிய வந்தது.
 கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
 கவனத்தை திசை திருப்பி திருட்டு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பொம்மிநகரைச் சேர்ந்தவர் ப.சிந்தாமணி (65), சென்னை சோழவரத்தில் வசிக்கும் மகளை பார்க்க வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.
 கோயம்பேட்டில் மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் சோழவரம் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக நின்றிருந்தபோது அங்கு வந்த ஒரு பெண்மணி, அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றால் ரூ.10 ஆயிரம் கொடுப்பார்கள் என கூறினாராம்.
 தங்கநகை அணிந்து சென்றால் பணம் தரமாட்டார்கள் எனவும் அப்பெண் கூறியதையடுத்து சிந்தாமணி, தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கநகைகளை கழற்றினார்.
 அந்த நகைகளை, அந்த பெண் வாங்கி ஒரு காகிதத்தில் வைத்துக் கொடுத்தாராம். சிந்தாமணியை அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு, வேறு சில பெண்களை அழைத்து வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றார்.
 வெகுநேரமாகியதால், சிந்தாமணி நகை பொட்டலத்தை பிரிந்து பார்த்தார். அப்போது அதில், நகைக்கு பதிலாக கல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 இது குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT