சென்னை

கல்லூரி மாணவர் தற்கொலை

DIN

கேளம்பாக்கம் லட்சுமி அவென்யூவைச் சேர்ந்த சரவணன் மகன் சுரேஷ்குமார் (19). இவர் செம்மஞ்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வந்தார். சுரேஷ்குமார் சரிவர படிக்காமல் இருந்தாராம். இதைக் கண்டித்த தாயார் ராஜேஸ்வரி, சுரேஷ்குமார் படிக்கும் கல்லூரிக்கு அண்மையில் சென்று, தனது மகன் சரியாக படிப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ்குமார் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் சரவணனும்,ராஜேஸ்வரியும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் ஒரு இளைஞரின் சடலம் உத்தண்டி கடற்கரையில் கரை ஒதுங்கியது. கானாத்தூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அது சுரேஷ்குமாரின் சடலம் என்பதும் கடலில் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT