சென்னை

கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி: நாளை ரயில் சேவையில் மாற்றம்

DIN


சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,  ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23)  காலை 7.50 முதல்  மதியம் 1.50 வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி, சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40,  10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு  சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே முதல் மின்சார ரயில் இயக்கப்படும். மறுமார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30,  10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.  தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணிக்கு முதல் மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT