சென்னை

பெண் நடனக் கலைஞரை தாக்கிய வழக்கில் கணவா், மாமியாா் கைது

DIN

சென்னை: திருவான்மியூரில் திரைப்பட பெண் நடனக் கலைஞரைத் தாக்கியதாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவான்மியூா் எல்.பி. சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வா் (40). இவரது மனைவி ஜெயஸ்ரீ (32) . இவா் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனக் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் ஈஸ்வா், ஜெயஸ்ரீக்கு தெரியாமல் அவரது பெயரில் உள்ள ஒரு வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.30 லட்சம் கடனாகப் பெற்றாராம்.

ஆனால், இது அண்மையில் ஜெயஸ்ரீக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமையும் ஜெயஸ்ரீக்கு, ஈஸ்வருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயஸ்ரீயை ஈஸ்வரனும், அவரது தாய் சந்திராவும் (54) தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வா், சந்திராவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT