சென்னை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு: சென்னையில் நாளை இலவசக் கருத்தரங்கம்

DIN


ஐஏஎஸ்,  ஐபிஎஸ் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில்  சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து அம்மைய இயக்குநர் சத்ய ஸ்ரீ பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி:  நிகழாண்டு நடைபெறவுள்ள ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்.,  ஐ.எஃப்.எஸ்.,  தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் கடந்த ஜனவரி முதல் நடைபெற்று வருகிறது.  வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களுக்கான வகுப்புகள் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 15-ஆம் தேதிகளில் தொடங்குகிறது.
ஆட்சிப் பணித் தேர்வுகளில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டும் நிகழ்ச்சிக்கு அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர்,  விவேக் ஹரி நாராயணன்,  கிங் மேக்கர்ஸ் மையத்தில் பயின்ற இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் அதிகாரி  பெனோ ஜெபைன் ஐஎஃப்எஸ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கட்டணச் சலுகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்று 100 சதவீதம் வரை கட்டணச் சலுகை பெறலாம். 
இதில் பங்குபெற, 94442 27273 என்ற எண்ணுக்கு பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT