திரைப்பட உதவி இயக்குநரிடம் வழிப்பறி
சென்னை விருகம்பாக்கத்தில் திரைப்பட உதவி இயக்குநரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் திரைப்பட உதவி இயக்குநரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனி கவரைத் தெருவைச் சேர்ந்தவர் சுனில்குமார் (25). இவர் தமிழ் திரைப்படத் துறையில் கலைப் பிரிவு உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் சுனில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.