சென்னை

பொறியாளரிடம் வழிப்பறி: இளைஞர் கைது

DIN

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் வினிவர்மா (25). மென்பொருள் பொறியாளர். இந்நிலையில் வினிவர்மா, சோழிங்கநல்லூர் கே.கே. சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
 அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், வினிவர்மா வைத்திருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசியையும், பணப் பையையும் பறித்துச் சென்றாராம். இது குறித்த புகாரின் பேரில், செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சோழிங்கநல்லூர் பள்ளிக்கூடம் 6-வது தெருவைச் சேர்ந்த ப.மணிவண்ணன் (22) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT