வாலாஜாசாலை-முகுந்தராயபுரம் இடையேயான ரயில் தடப் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், வாலாஜாசாலை-முகுந்தராயபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெய்பூர்-கோயம்புத்தூர் இடையிலான அதிவிரைவு ரயில் வாலாஜாசாலை ரயில் நிலையத்தில் ஜூன் 13-ஆம் தேதியன்று 110 நிமிடங்கள் நின்று செல்லும்.
ஹவுரா-யஸ்வந்த்பூர் இடையில் இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் வரும் 13-ஆம் தேதியன்று தலங்கை ரயில் நிலையத்தில் 95 நிமிடங்கள் நின்று செல்லும்.
காமாக்யா-யஸ்வந்த்பூர் இடையில் இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன வசதி கொண்ட விரைவு ரயிலானது வரும் 14- ஆம் தேதியன்று வாலாஜாசாலை ரயில் நிலையத்தில் 25 நிமிடங்கள் நின்று செல்லும்.
ஹெüரா-யஸ்வந்த்பூர் இடையில் இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் வரும் 15-ஆம் தேதி வாலாஜா ôலை ரயில் நிலையத்தில் 95 நிமிஷங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.