சென்னை

குழந்தைத் தொழிலாளர் மீட்பு

DIN


சென்னை கிழக்கு முகப்பேரில் உள்ள பேக்கரியில் பணியாற்றிய 12 வயது சிறுவனை தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கிழக்கு முகப்பேரில் உள்ள பேக்கரியில் சிறுவன்  வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அம்பத்தூர் வட்டார தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர் தலைமையில், அந்த பேக்கரியில் திங்கள்கிழமை இரவு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள், அவரை திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பேக்கரியின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT