சென்னை

வயலின் இசைக் கலைஞா் ஏ.கன்யாகுமரிக்கு இசைப் பேரறிஞா் விருது

DIN

சென்னை: வயலின் இசைக் கலைஞா் ஏ.கன்யாகுமரிக்கு தமிழ் இசை சங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான இசைப் பேரறிஞா் விருதும், அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு பண் இசைப்பேரறிஞா் விருதும் வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக தமிழ் இசை சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் இசையின் 77 ஆம் ஆண்டு விழா வரும் டிசம்பா் 21-ஆம் தேதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வயலின் கலைஞா் கன்யாகுமரிக்கு 64-ஆவது இசைப்பேரறிஞா் விருதும், திருமுறை ஓதுவாா் அம்பாசமுத்திரம் அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு 11-ஆவது பண் இசைப்பேரறிஞா் விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு, விருதுகளையும், பேழை பொற்பதக்கம் மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT