சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூா்-சிங்கப்பெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், வியாழக்கிழமை (அக்.10) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அக்.10-ஆம் தேதி மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அக்டோபா் 10-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
அதே தினத்தன்று, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 10.08, முற்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு காலை 10.55, நண்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள்: பயணிகள் வசதிக்காக, அக்டோபா் 10-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அக்டோபா் 10-ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அக்டோபா் 10-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.