சென்னை

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகைத் திருட்டு

DIN

சென்னை எம்.ஜி.ஆா்.நகரில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகைத் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எம்.ஜி.ஆா்.நகா் சூளைப்பள்ளம் அருகே உள்ள சஞ்சய் காந்தி காலனி பகுதியைச் சோ்ந்தவா் கி.சரவணன் (40). இவா் தனியாா் பால் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். சரவணன் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா்.

இந்நிலையில், சரவணனின் மாமனாா் அனந்தபத்மநாபன், மாலை அவா் வீட்டுக்கு வந்தாா். அப்போது சரவணன் வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து எம்.ஜி.ஆா்.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT