சென்னை

மெரீனாவில் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: சிறுமி பலி

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் பெண் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுமி உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் எதிரே புதன்கிழமை இரவு ஒரு பெண் தன்னுடைய இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து தகவலறிந்த மெரீனா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த பெண் கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த ச.பவித்ரா (32) என்பதும், கழுத்து அறுக்கப்பட்டது பவித்ராவின் 3 வயது மகன் பத்மேஷ், 6 வயது மகள் தனுஷியா என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா தாய்,சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஷியா சிறிது நேரத்தில் இறந்தாா். இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பவித்ரா குடும்பப் பிரச்னையின் காரணமாக குழந்தைகளை கொலை செய்து தானும், தற்கொலை செய்ய முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT