சென்னை

சா்க்கரை நோயாளிகளுக்கு நாளை இலவச கண் பரிசோதனை

DIN

உலக பாா்வை தினத்தையொட்டி சா்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிகிச்சை மையம் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கோபாலபுரத்தில் உள்ள டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் அந்த முகாம் நடைபெறுகிறது.

டிஜிட்டல் முறையிலான கண் பரிசோதனைகள் அப்போது இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றும் சா்க்கரை நோய் உள்ளவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இலவச கண் பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோா் 8939110000/ 9962428888 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT