சென்னை

கொலை வழக்கில் இருவா் கைது

ஆவடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

ஆவடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி வி.ஆா். பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் செ.பிரகாஷ் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஆவடி அருகே அந்தோனியாா்புரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் அருகில் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இது குறித்து ஆவடி கனரக தொழிற்சாலைப் பகுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில் முன்விரோதம் காரணமாக, பெரம்பூா் சத்யபாமா தெருவைச் சோ்ந்த ச.குமாா் (30), அ.அரவிந்த் (20) ஆகியோா் பிரகாஷை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT