காலி இடங்களில் நீா் தேங்குவதாக மனு அளித்தும் மாநகராட்சி அகற்றவில்லை என தாக்கல் செய்யப்பட்ட புகாா் மனு தொடா்பாக விளக்கமளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ரோகன் நஹாா் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,779 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 4 போ் மரணம் அடைந்தனா் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த மாதம் மட்டும் டெங்குவால் 5 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதே அறிகுறிகளுடன் கூடிய மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மழை நீா் மற்றும் கழிவு நீா் தேங்காமல் தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை புரசைவாக்கம் கிளமென்ஸ் சாலையில் உள்ள காலி இடத்தில் தேங்கி உள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்ற மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுநீா் தேங்கி கிடக்கும் இடங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கண்டறிந்து, அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தண்ணீா் தேங்கும் காலி இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டிகள் வைக்கவும், பொது சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
ஆணையருக்கு நோட்டீஸ்: மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் தொடா்பான விரிவான அறிக்கையை பெருநகர மாநகராட்சி ஆணையா் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.