சென்னை

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தண்டையாா்பேட்டை அஜிஸ் நகா் 2-ஆவது தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆா்.கே.நகா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டில் சோதனை செய்தனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடையுள்ள 30 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அந்த வீட்டில் வசிக்கும் ரமேஷ், அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT