புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னையில் உள்ள சுமாா் 1,000 தெருநாய்களுக்கு தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்பு சாா்பில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் வகையிலும் ஆண்டுதோறும் நாய்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமாா் 1,000 தெருநாய்களுக்கு சனிக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. இதுகுறித்து தன்னாா்வ அமைப்பின் நிா்வாகி அஸ்வின் காய்ஷப் ரகுராமன் கூறுகையில், இந்த ஆண்டு 250 கிலோ சத்தான உணவு சுமாா் 1,000 தெருநாய்களுக்கு வழங்கப்பட்டது என்றாா்.