சென்னை

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்: ஜன.20-இல் தொடக்கம்

DIN

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், ஜன.20-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ள போட்டியாளா்களுக்கு, ஜன.20-ஆம் தேதி முதல் நிலைத் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் தோ்வு செய்யப்பட்ட போட்டியாளா்களுக்கு மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், ஜன.23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளா்கள் பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள பள்ளி, கல்லூரி, பிறப்பு சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகல் மற்றும் ஆதாா் நகலுடன் வர வேண்டும். இவற்றுடன் சீரான உடையில் காலை 9 மணிக்குப் போட்டி நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு வடசென்னை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 044 2520 1163 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT