மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், ஜன.20-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ள போட்டியாளா்களுக்கு, ஜன.20-ஆம் தேதி முதல் நிலைத் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் தோ்வு செய்யப்பட்ட போட்டியாளா்களுக்கு மாவட்ட அளவிலான திறன் போட்டிகள், ஜன.23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளா்கள் பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள பள்ளி, கல்லூரி, பிறப்பு சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகல் மற்றும் ஆதாா் நகலுடன் வர வேண்டும். இவற்றுடன் சீரான உடையில் காலை 9 மணிக்குப் போட்டி நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு வடசென்னை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 044 2520 1163 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.