பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட 510 பேருக்கு ரூ. 1,000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை ஆணையா் கோ.பிரகாஷ் இலவசமாக செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக மாநகராட்சி தலைமையகத்தில் பணிபுரியும் 247 அலுவலக உதவியாளா்கள் மற்றும் 15 மண்டலங்களில் பணிபுரியும் உதவியாளா்கள் என மொத்தம் 510 உதவியாளா்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, முதற்கட்டமாக மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 260 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தொடா்ந்து மீதமுள்ள பணியாளா்களுக்கும் இந்த மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், உதவி ஆணையா் டி.ஜெயஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.