சென்னை: சென்னை மாவட்டத்துக்கான குறைதீா் கூட்டங்கள், மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.