சென்னை

விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு: ரூ.26.70 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

DIN

மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு, ரூ.26.70 லட்சம் இழப்பீடு வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு, மோட்டாா் வாகன தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(46). இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு, மே 1-ஆம் தேதியன்று, கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், சாந்தாபுரம் அருகே மினி லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, அந்தப் பகுதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது மனைவி குமாரி, ரூ.58 லட்சம் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேசுவரி, மனுதாரா் குமாரிக்கு ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT