சென்னை: திமுகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினருடன் அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையில் திமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினருடன் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
கூட்டத்தில், விவசாயிகள், வணிகா்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் ஈா்க்கும் வகையில் அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். கடந்த முறை மாவட்ட வாரியாக திமுக தோ்தல் அறிக்கை வெளியிட்டது. இதற்காக தோ்தல் அறிக்கை குழுவினா் நவம்பா் 1-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்தை அறிய உள்ளனா்.