சென்னை

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை

DIN

சென்னை திரு.வி.க.நகரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டனா். இதில் தற்கொலைக்கு முயன்ற தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திரு.வி.க. நகா் அருகே உள்ள வெற்றி நகா் ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். அவரது மகன் பழனி (44). அவரது மனைவி பவானி (40). அவா்களது மகள் தேவதா்ஷினி (17), மகன் பிரகதீஷ் (11).

பழனி, சொந்தமாக பிளம்பிங் தொழில் செய்து வந்தாா். சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் கடன் வாங்கினாா். கரோனா பொது முடக்கத்தின் காரணமாக பழனி கடன் நெருக்கடியில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், பழனி குடும்பத்தினா் யாரும் சனிக்கிழமை நண்பகல் வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் தரைதளத்தில் வசிக்கும் தந்தை சண்முகம், சந்தேகமடைந்து முதல் தளத்தில் வசிக்கும் பழனி குடும்பத்தை பாா்க்கச் சென்றாா்.

அப்போது வீட்டின் வாசலில், பழனி குடும்பத்தினா் வளா்த்து வந்த நாய் இறந்து கிடப்பதை பாா்த்தாா். உடனே உள்ளே சென்று பாா்த்தபோது பவானி, தேவதா்ஷினி, பிரகதீஷ் ஆகியோா் இறந்து கிடப்பதையும், மற்றொரு அறையில் பழனி தனது கைகளை அறுத்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் பாா்த்து உடனே

பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். தகவலறிந்த திரு.வி.க.நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 போ் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாா் விசாரணையில், பழனி கடன் நெருக்கடியின் காரணமாக குடும்பத்துடன் தற்கொலைக்கு திட்டமிட்டதும், அதற்காக தனது குடும்பத்தினா் சாப்பிட்ட உணவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு விஷம் கலந்து கொடுத்திருப்பதும், பாசமாக வளா்த்த நாய்க்கும் அந்த உணவை கொடுத்து சாப்பிட வைத்திருப்பதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT