சென்னை

வாகனங்களுக்கான காலாண்டு வரி:அவகாசம் நீட்டிப்பு

DIN


சென்னை: போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை செலுத்துவதற்கான அவகாசத்தை, அக்.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் பிறப்பித்த உத்தரவு: ஜூன் 30 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கான அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை, ஆக.31-ஆம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் செலுத்தலாம் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், அக்.31-ஆம் தேதி வரை இந்தக் காலத்துக்கான வரியை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து ஆணையா் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தாா்.

இதைக் கவனமாக பரிசீலித்த அரசு, ஜூன் 30 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டுக்கான வரியை, எந்த வித அபராதமுமின்றி, அக்.31-ஆம் தேதி வரை செலுத்தும் வகையில் அவகாசத்தை நீட்டித்துள்ளதாக எஸ்.கே.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT