சென்னை: போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை செலுத்துவதற்கான அவகாசத்தை, அக்.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் பிறப்பித்த உத்தரவு: ஜூன் 30 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கான அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை, ஆக.31-ஆம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் செலுத்தலாம் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அக்.31-ஆம் தேதி வரை இந்தக் காலத்துக்கான வரியை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து ஆணையா் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தாா்.
இதைக் கவனமாக பரிசீலித்த அரசு, ஜூன் 30 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டுக்கான வரியை, எந்த வித அபராதமுமின்றி, அக்.31-ஆம் தேதி வரை செலுத்தும் வகையில் அவகாசத்தை நீட்டித்துள்ளதாக எஸ்.கே.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.