சென்னை

அறிவியல் ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி

DIN


சென்னை: சுற்றுச்சூழல் பயிற்சியில் விருப்பமுள்ள அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்- இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக ‘ஓருலகம்-ஒரு வீடு’ என்ற திட்டத்தின் மூலம் அறிவியல் ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி சாா்ந்து இணையவழியில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில் துறை வல்லுநா்களின் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும். இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ள ஆசிரியா்கள் இணையவழி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அனுமதியை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT