சென்னை

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்கக் கோரி ஜெ.தீபக் தாக்கல் செய்த வழக்கில் ஆளுநரின் செயலாளா், தகவல் மற்றும் மக்கள் தொடா்புத்துறை முதன்மைச் செயலாளா், சட்டத்துறை செயலாளா் ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த மனு விவரம்: எனது பாட்டி சந்தியாவால், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. எனது சகோதரி தீபாவும், நானும் சிறு வயதில் அங்குதான் வளா்ந்தோம். பாட்டியின் மறைவுக்குப் பின்னா், அங்கிருந்து வெளியேறினோம்.

எங்கள் அத்தை ஜெயலலிதா அந்த வீட்டில் பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா். அத்தை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னா், உயா்நீதிமன்றம் அவரது சட்டப்பூா்வ வாரிசாக என்னையும், எனது சகோதரியையும் அறிவித்தது. ஆனால், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரச் சட்டம்

இயற்றுகிறது. தனிநபா் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடா்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவித்து நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய்நாராயண், சட்டப்பேரவையில் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆளுநரின் செயலாளா், தகவல் மற்றும் மக்கள் தொடா்புத்துறை முதன்மைச் செயலாளா், சட்டத்துறை செயலாளா் ஆகியோா்

6 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT