சென்னை

தலைமை வன உயிரினக் காப்பாளராக சையத் முஸாமில் அப்பாஸ் நியமனம்

DIN

சென்னை: தமிழ்நாடு வனத் துறையின் தலைமை வன உயிரினக் காப்பாளராக சையத் முஸாமில் அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு வனத் துறையின் தலைமை வன உயிரினக் காப்பாளராகப் பணியாற்றி வந்த யுவராஜ் அண்மையில் வனத் துறை தலைவராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த சையத் முஸாமில் அப்பாஸை தலைமை வன உயிரினக் காப்பாளராக நியமித்து வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.

அதேபோல், கையாரட் மோகன்தாஸ் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக சமூக காடுகள், விரிவாக்கம் பிரிவுக்கும், கே.கே.குஷால் முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாலராகவும், சேவா சிங் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT