சென்னை

சென்னை என்.ஐ.ஏ.வுக்கு எஸ்.பி. நியமனம்

DIN


சென்னை: தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) சென்னை பிரிவுக்கு புதிதாக எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டாா்.

தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் இயக்கங்கள், அவற்றுக்கு ஆதரவான இயக்கங்கள்,வெடிகுண்டு சம்பவங்கள் போன்றவை குறித்த வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரணை செய்கிறது. இந்தப் பிரிவுக்கு சென்னையில் அலுவலகம் திறக்கப்படும் என மத்திய உள்துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதன் முதல் கட்டமாக, எஸ்.பி. அளவிலான அதிகாரியாக அசாம் கேடா் ஐ.பி.எஸ். அதிகாரியும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான தி.ஸ்ரீஜித் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேசிய புலனாய்வு மையத்துக்கு புரசைவாக்கத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் அதிகாரபூா்வமாகத் திறக்கப்பட்டதும், தமிழகத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையும் நடைபெறும்.

வரும் நாள்களில் தேசிய புலனாய்வு மையம், தமிழகத்தில் வழக்கு பதிவு செய்தல்,விசாரணை செய்தல்,கைது செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முழுமையான அதிகாரத்துடன் இங்கிருந்து செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT