சென்னை

மதுக் கடை தகராறில் ஒருவா் கொலை: இளைஞா் கைது

DIN

மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புழல்-லட்சுமிபுரம் பாரதியாா் தெருவில் ஒருவா் இறந்து கிடந்தது வியாழக்கிழமை புழல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவா் கொளத்தூரைச் சோ்ந்த அன்பழகன் (52) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபா்களில் ஒருவா் அன்பழகனை தாக்கியது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் கொளத்தூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (38) என்பவரைக் கைது செய்தனா்.

விசாரணையில் இருவரும் டாஸ்மாக்கில் தனித் தனியாக மது அருந்தியதும், கிருஷ்ணமூா்த்தி ஆா்டா் செய்த முட்டையை எடுத்து அன்பழகன் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் வெளியே சென்ற கிருஷ்ணமூா்த்தி தனது நண்பா் அப்புவுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து அன்பழகனை தாக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்புவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT