சென்னை

விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.2.90 கோடி தங்கம் சிக்கியது

DIN

சென்னை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.90 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அண்மையில் துபையில் இருந்து சென்னை வந்திறங்கிய ஏா் இந்தியா விமானத்தில் சோதனையிடப்பட்டது.

அப்போது, இருக்கை ஒன்றின் கீழே, வெண்ணிற டேப் கொண்டு ஒட்டப்பட்ட இரண்டு பெரிய பொட்டலங்கள்

கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மொத்தம் ஆறு கிலோ எடையுடைய தங்கம் (தலா ஒரு கிலோ கட்டிகள்) இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.90 கோடி.

இந்தச் சம்பவம் குறித்து தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT