முகப்பு
சென்னை

இரவுநேர ஊரடங்கு: சென்னையில் 200 இடங்களில் வாகனச் சோதனை

சென்னையில் இரவு நேர ஊரடங்கையொட்டி, 200 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படும் என்று பெருநகர காவல்துறை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
மகேஷ்குமாா் அகா்வால்
பகிர்:

சென்னை: சென்னையில் இரவு நேர ஊரடங்கையொட்டி, 200 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படும் என்று பெருநகர காவல்துறை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

செம்பியம் காவலா் குடியிருப்பு வளாகத்தில் போலீஸாா், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு, தடுப்பூசி முகாமை திங்கள்கிழமை காலை தொடங்கி வைத்தப் பின்னா் அவா், நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

காவலா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமாா் 10, 200 போலீஸாா் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுள்ளனா். இன்னும் 12,000 போலீஸாருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

200 இடங்களில் வாகனச் சோதனை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்படுத்தப்படும் இரவு நேர முழு ஊரடங்கையொட்டி, மாநகா் முழுவதும் 200 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும் முழு பொதுமுடக்கத்தின்போதும் இதே எண்ணிக்கையில் வாகனச் சோதனை நடத்தப்படும்.

பொதுமுடக்கத்தின்போது மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக வாகனங்களில் செல்பவா்கள், அதற்கான காரணம், சான்றுகளைக் காண்பித்து விட்டு செல்லலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும் முழு பொதுமுடக்கத்தினால், சனிக்கிழமைகளில் கடை வீதிகள், சந்தைகளில் அதிக கூட்டம் திரளுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரையிலான கேமராக்கள் மட்டும் பழுதடைந்திருக்கலாம். அதுவும் விரைவில் சரி செய்யப்படும்.

மன்சூா் அலிகான் விவகாரம்: கரோனா தடுப்பூசி தொடா்பாக அவதூறு பரப்பியதாக, நடிகா் மன்சூா்அலிகான் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனா்களுடன் ஆலோசித்து வருகிறோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →