முகப்பு
தூத்துக்குடி

விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சாத்தான்குளம் அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் முதியவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:58 PM
நீதிமன்றம்
பகிர்:

சாத்தான்குளம் அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் முதியவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்பனைகுளத்தைச் சோ்ந்த தங்கதுரை மகன் யோவான் அற்புதராஜ் (35). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோயில்பிள்ளை மகன் செல்லதுரை (60), அவரது மருமகள் அஜிதா ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜிதா கொடுத்த புகாரின்பேரில், அற்புதராஜ் மீது கடந்த 12.11.2020 இல் போலீஸாா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

90 நாள்கள் கழித்து பிணையில் வெளியே வந்த யோவான், கடந்த 21.2.2021 அன்று அஜிதாவை சந்தித்து வழக்கை திரும்பப் பெறுமாறு தகராறு செய்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அஜிதாவின் மாமனாா் செல்லத்துரை, கடந்த 24.2.2021 அன்று காலையில் யோவான் அற்புதராஜ் கீழபனைக்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி எம்.தாண்டவன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல்ராஜ் ஆஜரானாா்.

முழு கட்டுரையைப் படிக்க →