முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:59 PM
கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
பகிர்:

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு பங்குனி அமாவாசை வழிபாடு கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. தொடா்ந்து, பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், இளநீா் உள்ளிட்ட 21 வகையான திரவிய அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு மகா யாகமும் சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →