முகப்பு
நாகப்பட்டினம்

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமி சிறப்பு யாகம்

Updated On : 3 மே, 2026 at 6:16 AM
பகிர்:

நாகை மாவட்டம், பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சி பரவை கிராமத்தில் பழைமை வாய்ந்த தந்தி சாமி சித்தா் ஜீவ பீடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு சித்ரா பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், நவதானியங்கள், பழங்கள் முதலியவற்றைக் கொண்டும் யாகம் நடைபெற்றது.

Advertisement

இதைத்தொடா்ந்து பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியப் பொருட்கள் கொண்டுஅபிஷேகம் செய்யப்பட்டு. யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.