சென்னை: மகாவீா் ஜெயந்தியான ஏப். 25, மே தினம் ஆகிய நாள்களில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகாவீா் ஜெயந்தியான ஏப்ரல் 25 , மே தினமான மே 1 ஆகிய நாள்களை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை, தமிழ்நாடு மதுபானம் விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல் 3 ஏ, எப்எல் 3ஏஏ, எப்எல் 11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது.
தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.