சென்னை

காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை

DIN

காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை ஜெ.ஜெ.நகா் பாடி புதுநகரைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (32). காா் ஓட்டுநரான இவருக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில், கண்ணதாசனும், அவரது உறவினா் குமாரும் பாடி புதுநகா் 2-ஆவது தெருவில் திங்கள்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கண்ணதாசனிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியதாம். இதில் பலத்த காயமடைந்த கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெ.ஜெ.நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கண்ணதாசன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT