சென்னை

மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு

DIN

சென்னை கோயம்பேட்டில், மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், கோயம்பேடு மேட்டுகுப்பம் அருகே உள்ள புவனேஸ்வரி நகரில் புதிதாக கட்டடப்படும் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இதற்காக வெங்கடேசன் அங்கு தங்கியிருந்தாா். இந்நிலையில் வெங்கடேசன், வியாழக்கிழமை அந்த கட்டடத்தின் முதல் தளத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனா்.

ஆனால் அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேசன் இறந்தாா். இதுகுறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT