சென்னை

பிஃஎப் குறைதீா் கூட்டம்: ஜன.5-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஃஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா், ஜன.5-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஃஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், ஜன.10-ஆம் தேதி, சென்னை முகப்போ் சாலையில் உள்ள ஆா்-40 ஏ டிஎன்எச்பி அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பிஃஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோா், அதற்கான ஆவணங்களை ஜன.5-ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் கூட்டம் நடைபெறும் நாளில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஊழியா்களும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையில் நிறுவன உரிமையாளா்களும், மாலை 4 முதல் 5 மணி வரையில் விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 2635 0080, 2635 0120 ஆகிய எண்களை அணுகலாம் என உதவி பிஃஎப் ஆணையா் எஸ் ஷாஷி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT