சென்னை திரும்பும் வழியில் வி.கே.சசிகலா, ராமாவரம் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சிறையிலிருந்து விடுதலையான வி.கே.சசிகலா, பெங்களூரில் இருந்து சாலை வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடைந்தாா். அவருக்கு அமமுக தொண்டா்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பளித்தனா். வரும் வழியில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆா். இல்லத்தில் அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அங்குள்ள எம்.ஜி.ஆா். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் எம்.ஜி.ஆரின் வாரிசுகளிடமும் அவா் நலம் விசாரித்தாா்.