சேலம் சித்த வைத்தியா் சிவராஜ் சிவக்குமாா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
சித்த வைத்தியா் சிவராஜ் சிவக்குமாா், பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வந்தாா். அவா் மட்டுமின்றி, அவரது குடும்பமே சித்த வைத்தியத்தில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அனுதாபங்கள் என தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.